tamilnadu

img

‘டிரம்ப்’ கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு

தீர்வுகாண்பாரா அமெ.ஜனாதிபதி?

சண்டிகர்,பிப்.22- அமெரிக்க ஜனாதிபதி வருகை யின் நினைவாக ‘டிரம்ப்’ என்று பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது.  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சமூக சேவை நிறு வனமான சுலப் இண்டர்நேஷனல் சார்பில் திறந்தவெளி கழிப்பி டங்கள் இல்லாத கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற் கொண்டது. அப்போது அரியானா மாநிலத்தில் உள்ள மரோரா கிரா மம் தேர்வு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப்பும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்ததன் நினைவாக மரோரா கிராமத்திற்கு  டிரம்ப் என  பெயரிடப்பட்டது. அன்று முதல் இந்த கிராமத்தில் உள்ள விதவைகளுக்கும், கணவ ரால் கைவிடப்பட்ட பெண்களுக் கும் இலவச கல்வி வழங்கப்படும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல வண்ணங்களில் கழிவறைகள் கட்டப்பட்டன.

தற்போது அந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கழிவறைகள் பயன்பாடற்று காணப்படுகின்றன. எனவே தற் போது இந்தியாவுக்கு வரும் டிரம்ப் தங்கள் கிராமத்துக்கு வருகை தந்து தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

;